கடலட்டைப் பண்ணை எங்களுக்கு வேண்டும்- யாழில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு!
14 view
எங்கள் கடலில் நாங்கள் பண்ணை செய்கின்றோம்-அட்டை பண்ணை எங்களுக்கு வேண்டும் என்று கடற்தொழில் சமூகங்கள் இணைந்து மீனவர்கள் இன்று யாழில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் . குறித்த ஆர்ப்பாட்டமானது யாழ்,கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மத்திய பேருந்து வழியாக சென்று அங்கிருந்து பலாலி வீதியினூடாக கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டது. கடற்தொழிலாளர் முன்னேற்றத்தை தடுக்கதே! வெந்து தணிந்தது காடு கடலட்டை பண்ணைக்கு Addmisson அ போடு!பதனிடும் நிறுவனத்தின் அங்குறாப்பரண நிகழ்வில் சோறு தின்ன சென்றனரா ” அன்ன ராசாக்கள் !போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்திருந்தனர். இதில் கடற்தொழில் சங்கங்கள் ,கடலட்டை பண்ணை செய்யும் தொழிலாளிகள்,கடலட்டை பண்ணைக்கு கோரிக்கை வைத்தவர்கள் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.
The post கடலட்டைப் பண்ணை எங்களுக்கு வேண்டும்- யாழில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலட்டைப் பண்ணை எங்களுக்கு வேண்டும்- யாழில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
