மாமியாரின் பணத்தை ஆட்டைய போட்ட மருமகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
6 view
கணவரின் தாயாரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவை திருடிய மருமகள் திருடப்பட்ட பணத்தில் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். அநுராதபுரம் வன்னியன் குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரின் மகன் அண்மையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதாகவும் அவர் தனது மகள் மற்றும் மகனின் மனைவியுடன் இரண்டு மாடி வீட்டில் வசித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கார் விற்பனை செய்த 10 இலட்சம் ரூபாயும், குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி விற்பனையில் கிடைத்த 5 இலட்சம் ரூபாய் உட்பட 15 இலட்சம் ரூபாயை வீட்டின் மாடி அறையில் உள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் திருடிச் சென்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி, போதைப்பொருள் உள்ளதா என பரிசோதிக்க விசேட காவல்துறை குழு வீட்டுக்குச் சென்றபோது, முறைப்பாட்டாளர் காவல்துறையினருடன் அறையொன்றிற்குச்…
The post மாமியாரின் பணத்தை ஆட்டைய போட்ட மருமகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாமியாரின் பணத்தை ஆட்டைய போட்ட மருமகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
