பாடசாலை மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி!
18 view
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர். தொடர் மற்றும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. குழந்தைகளை தனியாக விளையாடவோ, தனியாக குளிக்கவோ நீர்நிலைகளில் அனுப்பக்கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறது. ஆனால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. விழுப்புரம் பாணம்பட்டு ராகவேந்திரா கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் உதயா, 13 வயது, விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். விழுப்புரம் மணிமேகலை தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்ரமணி (14). இவர் பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால், உதயா, பாலசுப்ரமணி ஆகிய இரு நண்பர்கள், தங்கள் நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம் அருகே உள்ள அயன்கோவில்பட்டியில் உள்ள பம்பை ஆற்றில் குளிக்கச் சென்றனர். அவர்கள்…
The post பாடசாலை மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
