பாண் வாங்க சென்ற நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்!
14 view
சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தில் தம்புள்ளை கண்டளம கெப்பல பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காயமடைந்த குழந்தையை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து வைத்தியசாலை வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். கண்டளம பகுதியில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் குழந்தை தங்கியிருந்த போது, வீதியில் சூன் பான் முச்சக்கர வண்டி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து தனது தாத்தாவிடம்…
The post பாண் வாங்க சென்ற நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாண் வாங்க சென்ற நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
