வடக்கு மக்களுக்கு சீனா தொடர்ந்து உதவும் – சீனத் தூதர் யாழில் உறுதி!
7 view
சீனா நாடும், இலங்கை நாடும் கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம். இலங்கைக்கான சீனாத்தூதுவர் ஹுவெய் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, சீனா ஆகிய இருநாட்டின் நட்பு என்பது நட்பின் நண்பன் அந்தவகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இது சீனத் தூதரகத்தின் நிகழ்ச்சித் திட்டமாக காணப்பட்டுகின்றன. மேலும் ஒன்பது ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருள்கள் கிடைக்கபெறவுள்ளது. அவை யாழ்ப்பாண விவசாயிகள், கடற்றொழில் மீனவர்கள் ஆகியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மேலும் பத்தாயிரம் மெற்றிக்தொண் அரிசி இலங்கைக்கு சீனா நாடு பெற்றுக்கொடுக்கப்படயிருக்கின்றது. இவ் அரிசிகள் மூலமாக வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
The post வடக்கு மக்களுக்கு சீனா தொடர்ந்து உதவும் – சீனத் தூதர் யாழில் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மக்களுக்கு சீனா தொடர்ந்து உதவும் – சீனத் தூதர் யாழில் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
