இலங்கை மீனவர்களை துரத்திவந்த இந்திய மீனவர்கள் கைது!
13 view
இந்திய நாகப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 4 மீனவர்களின் தொழிலை (வலை) இலங்கை மீனவர்கள் வெட்டி எடுத்து கொண்டு வந்ததால், அவர்களை துரத்தி கொண்டு வந்ததில் வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கை கடற்கரையில் வந்து இறங்கி உள்ளனர். இதனால் வல்வெட்டித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். நாங்கள் எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை, எங்களின் வலையை இலங்கை மீனவர்கள் வெட்டி எடுத்துக் கொண்டு வந்ததாலேயே அவர்களை துரத்தி வந்தோம் என குறித்த மீனவர்கள் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
The post இலங்கை மீனவர்களை துரத்திவந்த இந்திய மீனவர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மீனவர்களை துரத்திவந்த இந்திய மீனவர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
