இலங்கையில் இந்த வருடத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு! ஆய்வில் வெளியான தகவல்
14 view
இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 37% குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 09% சப்ரகமுவ மாகாணத்திலும், 08% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன. கடந்த 11 மாதங்களில் மாத்திரம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராசிரியர் அத்துகோரலவின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டு வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் 39% பதிவாகியுள்ளன, கொள்ளை சம்பவங்களில் 14% வடமேல் மாகாணத்திலும் தென் மாகாணத்தில் இருந்து.13%…
The post இலங்கையில் இந்த வருடத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு! ஆய்வில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இந்த வருடத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு! ஆய்வில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
