வேலைவாய்ப்பு மோசடி – ‘டுபாய் சுத்தா’ கைது
7 view
டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. டுபாய் சுத்தா என்ற இந்த நபர், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு, ஓமானிலுள்ள ஏற்பட்டதாக கூறப்படும் பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட பல தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வேலைவாய்ப்பு மோசடி – ‘டுபாய் சுத்தா’ கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலைவாய்ப்பு மோசடி – ‘டுபாய் சுத்தா’ கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
