போதைப்பொருள் விற்பனைக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், பொலிஸார்! நீதி அமைச்சர் தகவல்

17 view
கைதிகள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் கண்ணியத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டால், சிறைச்சாலைகள் திணைக்களம் கைதிகளின் உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கைதிகளின் திறமைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் ‘ஷில்பா 2022 சிர சார’ கண்காட்சியை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது 85 வீதமான கைதிகள் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதேவேளை, 95 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு பாரியளவிலான போதைப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நபர்களை ஒடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் போதைப்பொருள் பரவுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட சில அரசியல்வாதிகள் ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர தினத்தை…
The post போதைப்பொருள் விற்பனைக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், பொலிஸார்! நீதி அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース