தெற்காசியாவில் உச்சம் தொட்ட பொருட்களின் விலை – இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா?
11 view
விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான அண்மைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய தெற்காசியாவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. டிசம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய 2022 நவம்பர் மாதத்திற்குள் இலங்கையின் வருடாந்த பெயரளவிலான உணவுப் பணவீக்கம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 74%ஐ எட்டியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நிலைமையை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதிகரித்த காலநிலை மாற்ற அதிர்ச்சிகள், வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு மற்றும் உள்ளூர் நாணயங்களின் மதிப்பிழப்பு காரணமாக, பொதுவாக தெற்காசியாவில் உணவு விலைகள் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக உள்ளதோடு, தெற்காசியாவிலும் ஆரோக்கியமான உணவுக்கான அணுகல் பொதுவாக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை காட்டுகிறது. மோசமான…
The post தெற்காசியாவில் உச்சம் தொட்ட பொருட்களின் விலை – இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்காசியாவில் உச்சம் தொட்ட பொருட்களின் விலை – இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
