தேய்பிறையாக மாறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு- தலைமை மீது தவராசா கடும் சீற்றம்!
12 view
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்.‘சூம்’ செயலி ஊடாக நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-“திருமதி அனந்தி சசிதரன், அருந்தவபாலன் போன்று பலரை தமிழரசுக் கட்சிதான் வெளியேற்றியது. எல்லோரும் பிரிந்து செல்கின்றார்கள். ஆரம்பத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது 10 பேர் என்று கூட்டமைப்பின் ஆதரவு சுருங்கி வருகின்றது. கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான்.எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் மூன்றாம் இடத்தையே பெற்றது. முதலிடத்தில் சிங்கள தேசியக் கட்சி பெற்றது. நாம்…
The post தேய்பிறையாக மாறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு- தலைமை மீது தவராசா கடும் சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேய்பிறையாக மாறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு- தலைமை மீது தவராசா கடும் சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
