கோட்டாவால் நியமிக்கப்பட்ட இலங்கை இராஜதந்திரிகளுக்கு ஏற்பட்ட நிலை
14 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பல்வேறு தலைநகரங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட சில இலங்கை தூதுவர்கள் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மாற்றப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வெற்றிடங்களை பெரும்பாலும் தொழில் இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது இராஜதந்திர சேவையில் 16 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 12 பதவிகளுக்கு வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்பவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக அப்போது நியமிக்கப்பட்ட சி.ஏ.சந்திரபிரேமவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அவருக்குப் பதிலாக நேபாளத்தில் பணியாற்றிய தொழில் இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக்க ஜெனீவாவுக்கு அனுப்பப்படவுள்ளார். பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹனவின் அனுபவம் இந்த நேரத்தில் முக்கியமானது என்பதால் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் சிறப்பாக பணியாற்றி வருவதால் அவர்…
The post கோட்டாவால் நியமிக்கப்பட்ட இலங்கை இராஜதந்திரிகளுக்கு ஏற்பட்ட நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவால் நியமிக்கப்பட்ட இலங்கை இராஜதந்திரிகளுக்கு ஏற்பட்ட நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
