இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று தீவிரமடையும் ஆபத்து! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
16 view
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், ஹொங்ஹொங் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. ஜனவரி இறுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு கோவிட் பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் கோவிட் தொற்று சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வாறிருப்பினும் தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளவர்கள்…
The post இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று தீவிரமடையும் ஆபத்து! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று தீவிரமடையும் ஆபத்து! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
