ஆளில்லா விமானம் மூலம் வட கொரியா ஊடுருவல் – தென்கொரியா குற்றச்சாட்டு
6 view
தமது வான்பரப்பிற்குள் பல ஆளில்லா விமானங்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜியோங்கி மாகாணத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தென் கொரிய வான்வெளியை ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக தெரிவித்தனர். ஐந்தாண்டுகளில் முதல் முறையாக வான்வெளிக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானங்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவை உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென் கொரிய போர் விமானங்களில் ஒன்றான கே.ஏ.-1 இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தென்கொரிய இராணுவம் கூறியுள்ளது. இறுதியாக வட கொரியாவின் ஆளில்லா விமானம் ஜூன் 2017 இல் எல்லையைத் தாண்டியபோது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
The post ஆளில்லா விமானம் மூலம் வட கொரியா ஊடுருவல் – தென்கொரியா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளில்லா விமானம் மூலம் வட கொரியா ஊடுருவல் – தென்கொரியா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
