வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!
6 view
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு நிகழ்வுகளையும், போட்டிகளையும் நகரசபை நடத்தியிருந்தது. அந்நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், கௌரவிப்புக்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன், நகரசபை உறுப்பினர்கள், விசேட அதிதிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
The post வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
