யாழ், மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறந்து வைப்பு!
10 view
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு திறந்து வைக்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு திறந்து வைக்கப்பட்டது. 2023 ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கு கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கான கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி மணிவண்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மணிக்கூட்டு வளைவினை திறந்துவைத்தனர். இதில் யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் அவர்களும் கலந்து கொண்டார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
The post யாழ், மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
