மண்மேடு சரிந்து வீழ்த்ததில் சகோதரன், சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு
9 view
வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இருவரும் கண்டி-அக்குரணை பகுதியை சேர்ந்த 18 மற்றும்19 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐந்து பேர் இருந்தனர். அவரும் மண் மேட்டின் கீழ் விழுந்து படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேவேளை நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை நீடிக்கும் நிலையில், பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post மண்மேடு சரிந்து வீழ்த்ததில் சகோதரன், சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்மேடு சரிந்து வீழ்த்ததில் சகோதரன், சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
