6 மாதக்காலமாக இலங்கையில் சிக்கியிருக்கும் ஸ்கொட்லாந்து பெண்..!
12 view
தனது கடவுச்சீட்டைத் திருப்பித் தருமாறு, இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த முடியாது என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய அதிகாரிகள் கூறியதன் காரணமாக, தாம் தொடர்ந்தும் 6 மாதக்காலமாக இலங்கையில் சிக்கியிருப்பதாக ஸ்கொட்லாந்து வலைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். தாம் மீண்டும் தாய்நாட்டுக்கு செல்ல பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் உதவவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மருத்துவ வீசாவில் இலங்கைக்கு வந்திருந்த கெய்லீ ஃப்ரேசர், காலிமுகத்திடல் போராட்டம் இடம்பெற்றபோது, அதனை தமது வலைப்பதிவின் ஊடாக ஒளிபரப்பி, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். இதனையடுத்து அவரின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில் சட்டப்போராட்டத்தின்போது, தனது ஆவணங்களைத் திரும்பப் பெற நீதியரசர்கள் மறுத்ததுடன், அடுத்த ஆண்டு ஜூலை வரையில் வழக்கை விசாரிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமது பாதுகாப்புக்கு பயந்து கடந்த அக்டோபரில் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கெய்லீ குறிப்பிட்டுள்ளார். விரக்தியடைந்த கெய்லி, தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தைத்…
The post 6 மாதக்காலமாக இலங்கையில் சிக்கியிருக்கும் ஸ்கொட்லாந்து பெண்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6 மாதக்காலமாக இலங்கையில் சிக்கியிருக்கும் ஸ்கொட்லாந்து பெண்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
