தேர்தலிலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் மந்திராலோசனை!
14 view
தமிழ்த் தரப்புக்கள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று தேர்தல்களை எதிர்கொண்டமையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான இணக்கங்கள் எட்டப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனின் நல்லூரிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தலைவர்…
The post தேர்தலிலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் மந்திராலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலிலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் மந்திராலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
