மக்கள் வங்கியில், மோசடி செய்யப்பட்ட நகைகள் மீள வேண்டும்- பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை!
24 view
மக்கள் வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மீள வேண்டும் – இல்லையேல் வாங்கியை முடக்கிப் போராடுவோம் யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்களின் நகைகள் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களால் மோசடி செய்யப்பட்ட நிலையில் அதனை எமக்கு மீளாப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர். தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட எமது நகைகள் குறித்த வாங்கி அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் எமது நகைகள் தற்போது வரை கிடைக்கப் பெறாத நிலையில் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். நகை மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிலர் மீண்டும் வங்கியில்…
The post மக்கள் வங்கியில், மோசடி செய்யப்பட்ட நகைகள் மீள வேண்டும்- பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் வங்கியில், மோசடி செய்யப்பட்ட நகைகள் மீள வேண்டும்- பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
