மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!
20 view
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, 1.260 கிலோகிராம் ‘மாவா’, 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் இத்துடன் தொடர்புடைன 47 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். இந்த சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
The post மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
