மட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக சற்குணம் தெரிவு!
6 view
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே இடம்பெற்ற போட்டியில் ஓந்தாச்சிமடம் வட்டார உறுப்பினர் சற்குணம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அண்மையில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் புதிய தவிசாளர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன்,மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பிரகாஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இன்றைய தவிசாளர் தெரிவுக்கு வேட்பாளர்கள் கோரப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் போட்டிக்கு அறிவித்தனர்.அதிலும் இரட்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஓந்தாச்சிமடத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சற்குணமும் களுவாஞ்சிகுடியை பிரதிநிதித்துவப்படுத்தும் வினோராஜும் போட்டியிட்டனர்.இதனடிப்படையில் நடைபெற்ற திறந்த வாக்கு அடிப்படையில் சற்குணம் அவர்கள் 10 வாக்குகளும் வினோராஜ் அவர்கள் 08வாக்குகளும் பெற்ற நிலையில் மேலதிக இரண்டு வாக்கினால் சற்குணம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…
The post மட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக சற்குணம் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக சற்குணம் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
