மலைநாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகள்!
13 view
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மரக்கறி வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு உற்பத்தியாகும் அனைத்து மரக்கறி வகைகளின் விலை உயர்ந்த நிலையில் உள்ளது. தம்புள்ளை மரக்கறி சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகள் இவ்வாறு விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது. போஞ்சி கிலோ 550/= கோவா கிலோ 275/= இந்த வட்டக்காய் கிலோ 300/= கத்தரி காய் கிலோ 300/= கெரட் கிலோ 390/= வெண்டிக்காய் கிலோ 280/=புடலங்காய் கிலோ 325/= பீட் கிலோ 400/= ஈரபிலாக்காய் 200/= கரிமிலகாய் கிலோ 1800/= பச்சை மிளகாய் கிலோ 1400/= தக்காளி கிலோ 290/= கீரைகள் கட்டு ஒன்று 40/= பூசணிக்காய் கிலோ 240/= பட்டாணா கிலோ 300/= வாழைக்காய் கிலோ 325/= வெள்ளரி கிலோ 200/=அவரைக்காய் 490/= இவ்வாறு விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
The post மலைநாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலைநாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
