வரலாற்று சாதனை படைத்த மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம்
8 view
பல சவால்களைத் தாண்டி வரலாற்றின் முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையில் 80 வீத சித்தியுடன் 9A சித்திகளையும் பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் முகமாக வித்யாலயத்தின் அதிபர் சிவநாதன் தலைமையில் கோலாகலமான கல்விசார் சாதனையாளர் விழாவில் கலந்து எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் பாராட்டி அவர்களின் வளர்ச்சியில் நான் என்றும் துணை நிற்பேன் என உறுதி வழங்க கிடைத்தமை பெரும் பாக்கியம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் நாயகமான பாரத் அருள்சாமி விழாவின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “கண்டி மாவட்டத்தில் மற்றும் மலையகம் எங்கும் மாணவர்களின் திறன் அபிவிருத்திக்கு பல வேலை திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளதுடன் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு எம் அனைவருக்குமே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைய உள்ளது. …
The post வரலாற்று சாதனை படைத்த மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரலாற்று சாதனை படைத்த மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
