மருந்து மாஃபியாவால் மருந்துகளின் விலை அதிகரிப்பு
6 view
மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், அதனை மொத்த மருந்துப் பற்றாக்குறையாக சிலர் வர்ணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் செயற்படும் மருந்து மாஃபியாவே மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post மருந்து மாஃபியாவால் மருந்துகளின் விலை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருந்து மாஃபியாவால் மருந்துகளின் விலை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
