சீனாவில் பரவும் புதிய ஒமிக்ரோன்; இலங்கையிலும் பரவும் அபாயம்!
6 view
சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த கொரோனா காலத்தில், இலங்கையில் பதிவாகிய முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் எனவும், அந்த அனுபவங்களை இம்முறை நிலைமையை தணிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீனாவில் பரவும் புதிய ஒமிக்ரோன்; இலங்கையிலும் பரவும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் பரவும் புதிய ஒமிக்ரோன்; இலங்கையிலும் பரவும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
