சிறுத்தையின காட்டு விலங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்பு!
6 view
பன்றிக்கு வைக்கப்பட்ட சுருக்கில் சிக்கிய சிறுத்தையின காட்டு விலங்கினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பகுதியில் குறித்த விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தனியார் காணியில், பன்றிகள் விவசாயத்தை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுருக்குகளை அமைத்துள்ளனர். குறித்த, காணிக்குள் நுழைய முற்பட்ட வேளை குறித்த சிறுத்தையின விலங்கு சுருக்கில் சிக்கியுள்ளது. இன்று காலை அவதானித்த காணி உரிமையாளர் கிராம சேவையாளர் ஊடாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற வனலாகா திணைக்கள அதிகாரிகள் குறித்த விலங்கினை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post சிறுத்தையின காட்டு விலங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுத்தையின காட்டு விலங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
