காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுப்பு
6 view
யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இவரின் சடலம் மாதகல் கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணமல் போயிருந்தார். காணாமல் போனவரை மறுநாள் திங்கட்கிழமை சக கடற்தொழிலாளர்கள் தேடி சென்ற சமயம் , உயிரிழந்தவரின் படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டதோடு தேடி சென்றவர்கள் குறித்த படகை மீட்டு கரை சேர்த்தனர். இந்நிலையில் இன்றைய தினம் காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
The post காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
