பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத நிலை அதிகரிப்பு- பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்!
37 view
உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் வருடாந்தம் பெருமளவான மாணவர்கள் பல்கலைக்கழக கற்றல் வாய்ப்பினை இழப்பதாக என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார். இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208வது ஆண்டினை குறிக்கும் வகையிலான ‘மத்திய தீபம்’ நூல் வெளியீடு இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஹாட்மன் அரங்கில் பாடசாலை அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் பாடசாலையின் பழைய மாணவருமான பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அருளானந்தராஜா,கமல்ராஜ்,பி.விமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அமெரிக்க மிசனரிகளினால் 1814ஆம் ஆண்டு இலங்கையில் முதல் பாடசாலையாக கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பல்வேறு சாதனைக்கொண்டதாகயிருந்துவருகின்றது. இப்பாடசாலையின் 208ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ‘மத்திய தீபம்’…
The post பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத நிலை அதிகரிப்பு- பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத நிலை அதிகரிப்பு- பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
