மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா – இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்..!
8 view
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
The post மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா – இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா – இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
