மன்னார் ஓ.எம்.பி அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை!
23 view
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும்.அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று புதன்கிழமை(21) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும்,பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம். அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள்.…
The post மன்னார் ஓ.எம்.பி அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் ஓ.எம்.பி அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
