மாணவர்களின் பைகளை சோதனை இடுவதில் கடைசி தீர்வு!
21 view
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளால் மாத்திரமே சோதனைக்கு உட்படுத்த முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை அதிகரித்ததை அடுத்து போலீசாரால் போதை பொருள் சுற்றிவழிப்புகளும், மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதனை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மனநிலை குழப்ப நிலைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேற்குறித்த தீர்வு கல்வி அமைச்சினார் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதனை நடைமுறை படுத்துவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுக்காப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
The post மாணவர்களின் பைகளை சோதனை இடுவதில் கடைசி தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களின் பைகளை சோதனை இடுவதில் கடைசி தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
