யாழ், கடல் பகுதியில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்!
16 view
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 104 ரோஹிங்கியா அகதிகளுடன் தத்தளித்து வந்த படகினை உள்ளூர் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மியான்மரில் நிலவும் வன்முறை சூழல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் தாங்கொண்ணா நிலைக் காரணமாகவும் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைவது தொடர் கதையாகியுள்ளது. இந்த சூழலில், இலங்கையின் இந்திய பெருங்கடல், பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் படகு தத்தளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை, கடற்படையின் கூற்றுப்படி, 104 பேரும் மியான்மரிலிருந்து இந்தோனேசியாவில் தஞ்சமடையும் நோக்கத்துடன் சிறிய படகில் வெளியேறியிருக்கின்றனர். படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் திசைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த 104 பேரில் 39 பேர் பெண்கள் 23 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு 80 வயது முதியவர், ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் சிறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
The post யாழ், கடல் பகுதியில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், கடல் பகுதியில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
