முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
15 view
முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியுள்ளனர் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு மக்களின் காணிகளுக்கு நில அளவை திணைக்களத்தினர் புதிதாக எல்லை கற்களை நாட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்திற்கு நேற்றையதினம் கள விஜயம் மேற்கொண்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.கொக்கு தொடுவாய் மத்தி என்று சொல்லக்கூடிய இந்த இடத்திலே வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு அவர்களுடைய வேண்டுகோளுக்கமைய வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவை திணைக்களத்தினர் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட இடங்களுக்கு தங்களுடைய எல்லை கற்களை நாட்டி இருந்தார்கள். குறிப்பாக கோட்டக்காணி பிள்ளையார் கோயில், அம்பட்டன் வாய்க்கால் , வெள்ளைக்கல்லடி, குஞ்சுகால்வெளி, சிவந்தா முறிப்பு போன்றவாறான வரிசையில் உள்ள அந்த இடங்களுக்கு எல்லைக் கல்லை நாட்டிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஐம்பது , அறுபது கல்…
The post முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
