இடைநிறுத்தப்படும் ரயில் சேவை! வெளியான முக்கிய அறிவிப்பு
10 view
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும். இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
The post இடைநிறுத்தப்படும் ரயில் சேவை! வெளியான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடைநிறுத்தப்படும் ரயில் சேவை! வெளியான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
