தினேஷ் ஷாப்டர் படுகொலை: மனைவியிடமும் வாக்குமூலம் 40 பேரிடமும் விசாரணை!
6 view
தனியார் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளரான பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பாக அவரது மனைவியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக அவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.தினேஷ் ஷப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் 15 பேர் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் 40 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும், ஷாப்டரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
The post தினேஷ் ஷாப்டர் படுகொலை: மனைவியிடமும் வாக்குமூலம் 40 பேரிடமும் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தினேஷ் ஷாப்டர் படுகொலை: மனைவியிடமும் வாக்குமூலம் 40 பேரிடமும் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
