இலங்கையில் மிக உயரமான இடத்தில் இம்முறை கிறிஸ்மஸ் விருந்து
14 view
கொழும்பில் உயரமான இடத்தில் இம்மமுறை கிறிஸ்மஸ் நிகழ்வை நடாத்த சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அமைச்சு , ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வுகள் டிசம்பர் 20 முதல் 28, 2022 வரை நடைபெறும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உணவு சந்தை , குளிர்பானக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் , இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் , டிஜேக்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரங்கம் ஆகிய அம்சங்களைக் இந்நிகழ்வு கொண்டிருக்கும். இந்த பண்டிகை நிகழ்ச்சியானது அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரே வளாகத்தில் பல இடங்களைக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அனுபவமாக இருக்கும். “கிறிஸ்துமஸ் கொழும்பு” நுழைவு இலவசம் மற்றும் தாமரை கோபுரத்தை பார்வையிடும் எவரும் நிகழ்விற்கு இலவச அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
The post இலங்கையில் மிக உயரமான இடத்தில் இம்முறை கிறிஸ்மஸ் விருந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மிக உயரமான இடத்தில் இம்முறை கிறிஸ்மஸ் விருந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
