இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக அரபு மொழி தின விழா!
6 view
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் அரபு மொழி விசேடதுறை மாணவர்களின் ஏற்பாட்டில் உலக அரபு மொழி தின விழா டிசம்பர் 19ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர் விசேட அதிதியாகவும், அரபு மொழிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அலியார் பிரதம அதிதியாகவும் அரபு மொழித் துறைத் தலைவர் ஏ. ஸீ.எப். ஸாதிபா சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் பீடத்தின் ஏனைய சிரேஷ்ட விரிவுரையாளர்களும் உதவி விரிவுரையாளர்களும் உட்பட சுமார் ஐநூற்றிற்கும் மேற்பட்ட மணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் நிகழ்த்தப்பட்டதன. உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு கடந்த 15ஆம் திகதி பீட மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட…
The post இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக அரபு மொழி தின விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக அரபு மொழி தின விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
