சட்டவிரோதமாக படகில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!!
22 view
யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்றைய தினம்) இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அங்கு தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். The post சட்டவிரோதமாக படகில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!! appeared first on உதயன் | UTHAYAN.
The post சட்டவிரோதமாக படகில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமாக படகில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
