கொழும்பில் சிக்கிய பொலிஸ் நிலையங்கள் – மின்சாரம் கட்
6 view
கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த வருடம் நிறைவடையவுள்ள போதிலும், கொழும்பில் உள்ள வைத்தியசாலைகள் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 400 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை இதுவரை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இதேவேளை, அடுத்த வருடத்திற்கான மின் கட்டண திருத்தம் இன்று (19ஆம் திகதி) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
The post கொழும்பில் சிக்கிய பொலிஸ் நிலையங்கள் – மின்சாரம் கட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் சிக்கிய பொலிஸ் நிலையங்கள் – மின்சாரம் கட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
