2023 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் கட் – 6 பில்லியன் ரூபா அபேஸ்
7 view
6 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை நீர் கட்டணம் செலுத்தாது நிலுவையாக உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. சுமார் 800,000 குடும்பங்கள் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணத்தில் பின்தங்கியுள்ளதாக நீர் சபையின் உதவி பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார். 60 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் கட்டண பாக்கி வைத்திருக்கும் நுகர்வோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க சபை கட்டாயப்படுத்தப்படும் என்றார்.
The post 2023 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் கட் – 6 பில்லியன் ரூபா அபேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் கட் – 6 பில்லியன் ரூபா அபேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
