ஜனநாயக அரசியலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியியை வரவேற்கிறேன்! – மாவை
6 view
இனத்துக்காக ஆயுதப் போராட்டத்தில் பயணித்த போராளிகள் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கைகோர்த்தமை வரவேற்கிறேன் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சி தனது முதலாவது தேசிய மாநாட்டை நடத்தியதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுதப் போராட்டம் மெளநிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழியில் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயக போராளிகள் கட்சி தயாராகியுள்ளது. நாங்கள் ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இணைந்தே பயணித்தோம். அக் காலப்பகுதியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் காத்திரமான விடயங்கள் இடம்பெறவில்லை. பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய சிங்கள பேரினவாத அரசு தமிழர் மீது கொடிய யுத்தத்தை மேற்கொண்ட…
The post ஜனநாயக அரசியலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியியை வரவேற்கிறேன்! – மாவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனநாயக அரசியலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியியை வரவேற்கிறேன்! – மாவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
