கொழும்பை உலுக்கிய படுகொலை: அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம்!
6 view
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 15 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.நேற்றுமுன்தினம் மாலை பொரளை பொது மயானத்துக்கு அருகில் கைகளும், கால்களும் கட்டப்பட்டு, கழுத்தில் பலத்த காயங்களுடன், காரில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தார்.இந்தநிலையில், பொரளை மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் காரில் இருந்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய, சந்தேகநபர்களை அடையாளம் காணபதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸிடம் குற்றப் புலனாய்வுத்…
The post கொழும்பை உலுக்கிய படுகொலை: அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பை உலுக்கிய படுகொலை: அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
