வடகிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்- சுமந்திரன் எம்.பிவேண்டுகோள்!
6 view
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் ஏற்கனவே சொன்ன அடிப்படையிலே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.இந்த மூன்று விடயங்களும் ஜனாதிபதி தானாகவே சொல்லி இருக்கின்ற காலக்கேடு அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பெப்ரவரி நான்காம் திகதியில் கொண்டாடுவதற்கு முன்பதாக செய்து முடிக்க வேண்டும் என ஜனாதிபதி சொல்லி இருக்கிறதை நாங்கள் முற்று முழுதாக ஏற்று இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம் எனும் தலைப்பிலான இரத்ததானமுகாம் இன்று மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள…
The post வடகிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்- சுமந்திரன் எம்.பிவேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்- சுமந்திரன் எம்.பிவேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
