காரைதீவில் 'உணவு வங்கி' அங்குரார்ப்பண நிகழ்வு!
14 view
முறையற்ற உணவு கையாள்கையினாலும், மக்களுக்கிடையில் இருக்கும் மனரீதியான மாறுபட்ட சிந்தனை காரணமாகவும் தினந்தோறும் 70 மெற்றிக் தொன் கிலோ உணவுகள் வீண்விரயம் செய்யப்படுகின்றது. அதில் 56 சதவீதமானவை மக்கள் பாவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது. இருந்தாலும் மக்களுக்கிடையில் இருக்கும் மனரீதியான மாறுபட்ட சிந்தனை காரணமாக உணவுகள் குப்பைக்கே செல்கிறது. எங்களுக்கிடையில் இருந்த அயலவர்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் முறையில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களே இப்படியான இழப்புகளுக்கு வாய்ப்பாக உள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு இணங்க காரைதீவு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது “உணவு வங்கி” அங்குரார்ப்பண நிகழ்வு மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் ஜும்மாப்பள்ளிவாசல் உப தலைவர் டாக்டர் எம்.எச்.எம். சறூக் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…
The post காரைதீவில் 'உணவு வங்கி' அங்குரார்ப்பண நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைதீவில் 'உணவு வங்கி' அங்குரார்ப்பண நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
