வடக்கு கிழக்கில் கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
7 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post வடக்கு கிழக்கில் கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
