யாழில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்!
6 view
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நேற்று புதன்கிழமை (14.12.2022) உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. நாவாந்துறை மற்றும் பழம் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து இக்குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. உலருணவுப் பொதிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை அமரர் பொ. பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
The post யாழில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
