ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாமில் இரு மலையக மாணவிகள்!!
6 view
11 வது ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாம் நேபாளத்தில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள நிலையில் ,குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை மலையகத்தில் இருந்து இருந்து பூண்டுலோயா கந்தசாமி தேசிய பாடசாலையின் மாணவி சி .யுகாஷினி மற்றும் நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையின் மாணவி சி .சஞ்சீவனி ஆகியோர் இன்று நேபாளம் புறப்பட்டு சென்றுள்ளனர். குறித்த முகாமின் பிரதான நோக்கம் சிறுமிகளுக்கு சர்வதேச தொடர்பினை ஏற்படுத்தி கொடுப்பதுவும் சர்வதேச நாடுகளின் கலாசார பண்புகளை அறிந்துகொ கொள்வதோடு, தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதுமாகும். குறித்த நிகழ்வுகளுக்காக ஆசிய நாடுகளான இலங்கை , இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், பங்கலாதேஸ், நேபால், மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் களந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
The post ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாமில் இரு மலையக மாணவிகள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாமில் இரு மலையக மாணவிகள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
