வவுனியா நகரில் திடீரென ஏற்பட்ட மாற்றம்
6 view
வவுனியா நகரின் வீதிகளில் சுற்றித்திரிந்த 100 மாடுகளை, வவுனியா நகர சபை பிடித்து, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக மாடுகளை அவிழ்த்து விட வேண்டாம் என மாநகரசபையினர் , மாடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன், மழையுடன் கூடிய காலநிலையின் போது வவுனியா நகர வீதிகளில் திரியும் கால்நடைகளினால் ஏற்படும் வாகன நெரிசல், விபத்துகள், பயிரழிவுகள் போன்றவற்றை கருத்திற்கொண்டு வவுனியா நகர சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. மேலும், பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அவற்றை எடுத்துச் செல்லாவிட்டால் ஏலம் விடப்படும் என வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது.
The post வவுனியா நகரில் திடீரென ஏற்பட்ட மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா நகரில் திடீரென ஏற்பட்ட மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
