சமூக வலைதளங்களுக்கு தடை – இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
6 view
இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது. நேற்று முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.டி. ஹெராத் பிறப்பித்த உத்தரவின் மூலம் அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கு செயற்படும் அதிகாரிகளுக்கும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர் எந்த காரணத்தை கொண்டும் தனது அதிகாரப்பூர்வ அடையாளம் மற்றும் தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக ஊடக வலைத்தளங்களில் இணைப்புகளைப் பதிவேற்றுவது, பதிவுகளை வெளியிடுவது, பதிவுகளை அனுப்புவது மற்றும் பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்கள், எந்தவொரு நபர் அல்லது அமைப்பு பற்றிய அவதூறான அறிக்கைகள் மற்றும் இந்த நாட்டின் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தகவலையும் பரிமாறிக்கொள்ள…
The post சமூக வலைதளங்களுக்கு தடை – இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக வலைதளங்களுக்கு தடை – இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
